ஜோக் 17

மேனேஜருக்கும் நமக்கும் இதுதாங்க வித்தியாசம்....!
ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.
உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..
“தரவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்..”
ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா…சோம்பேறி.
அவராலே செய்யமுடியலேன்னா…..” நேரம் இல்லே..”
எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா…” முட்டாள்தனம்”
அவர் பண்ணினா..” அவரும் மனுஷந்தானே..கடவுளா..?”
நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்”
அவர் செஞ்சா..” முன்னுதாரணம்”
நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா..”பிடிவாதம்”
அவர் அப்படி நெனைச்சா…” கொள்கையில் உறுதி..”
நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா..” காக்கா பிடிக்கறீங்க.”
அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா..” ஒத்துழைப்பு..பணிவு”
நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா..” ஊர் சுத்தறீங்க”
அவர் இருந்தா.. ” பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கறார் ''
நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவு போட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க”
அவர் லீவு போட்டா..ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்..”
என்ன உலகமடா சாமீ இது..?

ஜோக் 16

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .
இதுதான் வாழ்க்கை .
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும்............ ...!!
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
தத்துவம் 2:
ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !
(என்ன கொடுமை சார் இது !?!)
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்
ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)
தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.
கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்
T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .
இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .
ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு
ஆனா.........தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு....
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .
வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
(இது மல்லாக்கபடுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங் னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது
"Tea" / "Cofee" எது சுகாதாரம் இல்லாதது ??........ "Tea"ல ஒரு "ஈ " இருக்கும்.
"Coffee"ல 2 "ஈ " இருக்கும்.
நோ நோ நோ... நோ பேட் வோர்ட்ஸ்...

ஜோக் 15

கூட்டமான பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்குள் இருவர் பேசிக்கொண்டது
ஒருவர் :சார் இது என் சீட் . . . டவல் போட்ருக்கேன் பாருங்க
மற்றொருவர் :அப்போ பஸ் மேல என் வேஷ்டிய அவுத்து போட்டுட்டா பஸ் எனக்கு சொந்தமாயிடுமா. . . ?
திருந்துங்கடா

ஜோக் 14

நகைசுவைகாக மட்டுமே !!!
ஒரு கார் டிரைவர் டெல்லியில் பாராளுமன்றத்தின் அருகில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார் .
திடீரென்று ஒருவர் வந்து கார் ஜன்னல் கண்ணாடியை தட்டினார்...டிரைவரும் கண்ணாடியை இறக்கி என்ன நடக்கிறது இங்கே..ஏன் இவ்வளவி டிராபிக் ஜாம் என்று விசாரித்தார் .அவர் சொன்னார் ......
"தீவிரவாதிகள் எல்லா அரசியல்வாதிகளையும் பிடித்து வைத்து கொண்டு விடுவிக்க வேண்டுமென்றால் ஒருவருக்கு 100 மில்லியன் டாலர் பணம் கொடுக்க வேண்டுமாம்....இல்லையென்றால் அவர்களையெல்லாம் மொத்தமாக பெட்ரோல் போட்டு எரித்து விடுவார்களம் ..அதனால் நாங்கள் கார் காராக சென்று வசூல் செய்கிறோம் "
"எல்லோரும் எவ்வளவு கொடுக்கிறார்கள் தோரயமாக ?" என்று அந்த கார் டிரைவர் கேட்டார் ....அதற்க்கு அந்த மனிதர் சொன்ன பதில் ......
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"இரண்டு லிட்டர் "

ஜோக் 13

டாக்டர்களும் இன்ஜினியர்களும் ஒரு மீட்டிங்குக்கு செல்ல இரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள்.
கவுண்டருக்கு சென்று டிக்கெட் வாங்கி வந்தபோது டாக்டர்கள் நான்கு பேருக்கும் டிக்கட் வாங்கி இருந்தார்கள். ஆனால் இன்ஜினியர்கள் நான்கு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி இருந்தார்கள்.
டாக்டர்கள் இன்ஜினியர்களிடம், 'ஒரே ஒரு டிக்கட்டுல எப்படி நாலு பேர் ட்ரெயின்ல பயணம் செய்வீங்க.. மாட்டிக்க போறீங்க' என்றார்கள்.
இன்ஜினியர்கள், 'பாத்துகிட்டே இருங்க' என்று சொன்னார்கள்.
டிரெயின் புறப்பட்டதும் டாக்டர்கள் தங்கள் சீட்டில் வந்து உக்காந்தார்கள். இன்ஜினியர்கள் நான்கு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் புகுந்து கதவை சாத்தி கொண்டார்கள்.
டி.டி.ஆர் வந்து டாயிலட் கதவை தட்டியபோது ஒரே ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி டிக்கட்டை காண்பித்தார்கள். டி. டி. ஆர் செக் பண்ணி முடித்து சென்றதை பார்த்த டாக்டர்கள் திரும்பி போகும்போது அதே வழி முறையை தாங்களும் கடைபிடிக்கலாம்ன்னு முடிவு செஞ்சாங்க.
அதனால டாக்டர்கள் நாலு பேருக்கும் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தாங்க. ஆனா இந்த முறை இன்ஜினியர்கள் யாருமே ஒரு டிக்கட் கூட எடுக்கலை.
டாக்டருங்க, 'எப்படி நீங்க ட்ரெயின்ல வர போறீங்க' என்று கேட்டார்கள்.
இன்ஜினியர்கள், 'பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்கள்.
டிரெயின் புறப்பட்டதும் இம்முறை டாக்டர்கள் நாலு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார்கள்.
மூன்று இன்ஜினியர்கள் மற்றொரு டாயிலட்டுக்குள் நுழைந்து தாழிட்டு கொள்ள ஒரே ஒரு இன்ஜினியர் மட்டும் வெளியே வந்து டாக்டர்கள் டாயிலட் கதவை தட்டி, 'டிக்கெட்..டிக்கெட்' என்று கத்தினான்.

ஜோக் 12

ஸாரி கொஞ்சம் ஓவர்!
##################
பிச்சை போடும் வீட்டுக்கார பெண்மணி; " கொஞ்சம் அப்படியே இருப்பா உனக்கு தர்மம் பண்றதை ஒரு செல்பி எடுத்துக்கிறேன் பேஸ் புக்ல போட..."
பிச்சைக்காரன்;"எடுத்துக்கோங்க மகராசி....ஆனா ஒரே ஒரு கண்டிஷன் எனக்கு டேக் பண்ண கூடாது!"

ஜோக் 11

VIMALA : உன் கணவருக்கு நீ ஊட்டி விட்டதை நான்
பார்த்தேன்…!
KAMALA : அடி போடி…நீங்க செய்த சப்பாத்தி எப்படி இருக்குன்னு
நீங்களே பாருங்கன்னு அவர் வாயில் திணித்தேன்…!

ஜோக் 10

ஒரு விறகு வெட்டியொருவன் இருந்தான் …!
ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவனது கோடரி காணாமல் போய்விட்டது ……!
கடவுளே என்று உரத்து கத்தினான் …என் குடும்பத்தை காப்பாற்று ..என் கோடரியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான் …!
கடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால்
**தங்க உலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்****
விறகு வெட்டி இல்லை சாமி -என்றான்
**வெள்ளிஉலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்****
விறகு வெட்டி இல்லை சாமி -என்றான்
**அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து இதுவா உன் டகோரி என்று கேட்டார்**
ஆமா சாமி ..என்றான்
கடவுள் இவனது பண்பை அவதானித்து அவனிடம்
நீ உண்மையை கூறியதால் மூன்று கோடரியையும் கொடுத்தார் …
நடந்ததை தன் மனைவியிடம் கூற பேராசைபிடித்த மனைவி தன்னையும் கடவுளிடம்
கூட்டிச்செல்ல மன்றாடினாள்
அவனும் சம்மதித்து காட்டுக்கு அழைத்து சென்றபோது திடீர் என மனைவி காட்டு வழியில்
காணாமல் போய்விட்டாள்…!
கடவுளே என்று உரத்து கத்தினான் …என் குடும்பத்தை காப்பாற்று ..என் மனைவியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான் …!
கடவுள் வந்து நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால்
**சமந்தாவை வரவழைத்து இதுவா உன் மனைவி என்று கேட்டார் …?
அவன் ஆமாசாமி என்றார்
கடவுள் திகத்துவிட்டார் …என்னப்பா ..?உன் நேர்மை எங்கே ..? பொய்சொல்லிட்டியே …?
இல்ல சாமி நீங்கள் …..!
**முதல் சமந்தாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் இல்லை சாமி என்பேன் …
அடுத்து தமனாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் இல்லை சாமி என்பேன்
என் உண்மை மனைவியை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் ஆம் என்பேன்
நீ உண்மை பேசியதால் மூன்றுபேரையும் வைத்திரு என்பீர்கள்
நானோ விறகு வெட்டி எப்படி சாமி…மூன்றுபேரையும் வைத்து வாழுறது அதுதான் .....

ஜோக் 9

" ஏண்டி, இதை என்னால சத்தியமா ஜீரணிக்க முடியலை"...
" எதை சொல்றீங்க ?...
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
பக்கத்து வீட்ல கார் வாங்கியிருக்குறதையா "?..
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
" அதை இல்லடி, நீ காலையில கொடுத்த டிபனை சொல்றேன்"!!!

ஜோக் 8

கொஞ்சம் சிரிங்க பாஸ்...
வாட்ச்மேனை கூட்டிகிட்டு வந்து
கடன் கேட்கிறீங்களே ஏன்???
நீங்கதானே சார் சொன்னீங்க செக்யூரிட்டி இல்லாம கடன் கொடுக்க மாட்டேன்னு அதான்
ங்கே

ஜோக் 7

தலைவலி எப்படி இருக்குன்னு கேட்டா, நல்லா
சிவப்பா குண்டா இருக்குன்னு சொல்றீங்களே?
நான் என் மனைவியைச் சொன்னேன் டாக்டர்..!

ஜோக் 6

மனைவி வெளியே போயிருந்தப்ப, முதன்முறையாக தன் 12 வயது மகள் சூப்பரா 'டீ' போட்டு தந்ததை தன் மனைவியிடம் பெருமையாக சொல்லிக்கொண்டார் கணவர். ஆச்சரியப்பட்ட மனைவி சொன்னார்...
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
" டீ சூப்பரா இருக்கலாம். ஆனா தண்ணி பிடிக்க அவளுக்கு டாய்லெட் பைப் தவிர வேறெதுவுமே கைக்கெட்டாதே...."

ஜோக் 5

SON : அப்பா,எனக்கு ஒரு சந்தேகம்?
DADDY : ம்ம்ம்...கேளுப்பா?
SON : கோபம்னா என்ன? கொலைவெறினா என்னப்பா?
DADDY : அதுவா...உங்க அம்மா நமக்கு தினமும் காலைல "உப்புமா" செஞ்சு கொடுக்குறாளே, அதான்ப்பா "கோபம்". அதே உப்புமாவே நைட்டுக்கும் திங்க சொல்லுறாளே, அதுதான் "கொலவெறி"
WIFE : அப்பாவும் மகனும் அங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க.உப்புமா ரெடியாயிடுச்சு சீக்கிறம் சாப்பிட வாங்க.
DADDY : நம்மள கொல்லாம விடமாட்டா மகனே.

ஜோக் 4

போன வாரம் எங்க பையன் ஸ்கூல்ல
Parents Meeting-க்கு நாங்க போயிருதோம்.
மீட்டிங் முடிஞ்சி வெளியே வரும்போது
அங்கே ஒரு Long Size Note வெச்சி இருந்தாங்க.
Parents அவங்க Suggestions எழுதவாம்...
சரி நாமளும் அந்த Note-ல எதாவது
எழுதலாமேன்னு போனா..
அங்கே ஒரு 2nd Std பொண்ணோட அப்பா
எதோ எழுதிட்டு இருந்தாரு..
சரி. அவர் எழுதட்டும்னு நான்
Wait பண்ணினேன்.
பண்ணினேன்.., பண்ணினேன்..,
Wait பண்ணிட்டே இருந்தேன்.
5 நிமிஷம் ஆகியும் Note என் கைக்கு வரலை....
அப்படி என்னதான்டா எழுதறார்னு லைட்டா
எட்டி பாத்தேன்..
அரை பக்கத்துக்கு மேல இங்கிலீஷ்ல
எதோ எழுதிட்டு இருந்தாரு..
( ஓ.. இவரு.. நம்ம ஸ்கூல்ல படிச்சி
இருக்க மாட்டார் போல..!!)
மறுபடியும் Wait பண்ணினேன்..
2 நிமிஷம் ஆச்சு..
இப்ப அவரு முக்கால் பக்கத்தை தாண்டிட்டாரு..
அப்புறம் என் Wife என்னை தேடி வரவும்.,
அவரு Note-ஐ என்கிட்ட தந்துட்டு போகவும்
சரியா இருந்தது..
" நிர்மாலா.. அவரை நல்லா பாத்துக்கோ..! "
" யாருங்க அவரு..? "
" இந்த அப்பாடக்கர்.. அப்பாடக்கர்னு சொல்றாங்கல்ல..
அந்த ' அப்பா-டக்கர் ' இவர் தான்.."
என் Wife ஓண்ணும் புரியாம முழிக்க..,
அவர் எழுதின Note-ஐ காட்டினேன்..
அதை பாத்துட்டு என் Wife..
" படிச்சவங்களை பாத்தா உங்களுக்கு ஏங்க
இவ்ளோ காண்டு...?! "
" என்னாது படிச்சவங்களா..? அப்ப நாங்கல்லாம்
மாடு மேய்ச்சவங்களா..? நீ ஒரு MCA Gold Medalist -கிட்ட
பேசிட்டு இருக்க. Mind It..! "
" அந்த Gold Medal., AVR Jewellers-ல வாங்கினதுன்னு
உங்க பாட்டி என்கிட்ட சொல்லிட்டாங்க..! "
" ஹி., ஹி., சொல்லிட்டாங்களா..? "
( பாட்ட்டீய்ய்ய்ய்ய்...! )
" சரி., உங்க MCA அறிவை Use பண்ணி அவர்
எழுதின மாதிரி English-ல எழுதுங்க பார்க்கலாம்..! "
" பெட்ர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா..? "
" ஆமா...!!! "
நோட்டை வாங்கி அவர் எழுதின இங்கிலிபீசை
ஒரு தடவை லுக் விட்டேன்...
" ப்பூ.. இதென்ன பிஸ்கோத்து மேட்டரு..!
இப்புடு சூடூ........"
பேனாவை எடுத்து.., அவர் எழுதினதுக்கு கீழே
டக்னு எழுதினேன்...
" REPEATUUUUUUU..! "

ஜோக் 2

உறவுகள் மேம்பட என்ன செய்யனும் தெரியுமா???
.
.
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ராம்ராஜ். பனியன் ஜட்டி வாங்கி போட்டுக்கோங்க.
இப்பதான் டீவியில பார்த்தேன்.
விளம்பரத்தை

ஜோக் 3

கொஞ்சம் சிரிங்க பாஸ்...
நிறைய டெஸ்ட் எடுத்துப்பார்த்ததுல
உங்க மனைவிக்கு கொழுப்பு கொஞ்சம்
அதிகமா இருக்குதுன்னு தெரியுது
இதுக்கு போய் ஏன் டெஸ்ட் எடுத்தீங்க
அஞ்சி நிமிசம் அவளோட. பேசி இருந்தாலே
தெரிஞ்சிருக்குமே டாக்டர்.
ங்கே..

ஜோக் 1

தனியார் கண் மருத்துவமனை ஒன்றில்
டாக்டர்: நீங்க படிக்கும்போது கண்ணாடியைப் போட்டுக்கங்க
நோயாளி: நான் படிச்சு முடிச்சிட்டு இப்ப வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கேன் டாக்டர்.