பக்தாள் சோதித்து திடம் சொல்லும் சோதிடன்.


யாரும் சோதிடம் பார்க்க அன்று வராத கவலையில் இருந்தான் ஒரு சோதிட பக்தாள்.
ஒரு இளைஞன் அப்போது சோதிடம் பார்க்க வந்தான்.
பக்தாள் முகத்தில் பவர் வந்தது.
நீ நினைத்த காரியம் சுபமாய் முடியும்.
ஒரு தடையும் வராது.
உடனே செயல்படு என்று இளைஞனிடம் சொன்னான் பக்தாள்.
பக்தாளைப் பார்த்து இளைஞன் சொன்னான்
உன் மகளைக் காதலித்தது நான் தான்.
நீங்கள் சொன்னபடியே செய்கிறேன் என்றான்.
சோதிட பக்தாள் சோர்ந்து போனான்.

0 comments:

Post a Comment