பக்தாளின் அம்மா

பக்தாள் நண்பனின் அம்மா இறந்து போனார்.
பக்தாள் அங்கு சென்றான்.
நண்பனோ கதறி கதறி அழுதான்.
அவனது அன்பை எல்லோரும் பார்த்து வியந்தார்கள்.
அதைப் பார்த்த பக்தாளுக்கு நண்பன் மீது பொறாமை வந்துவிட்டது.
வீட்டுக்கு வந்து அவன் அம்மாவைப் பார்த்தான்.
நண்பன் அவனது அம்மா இறந்ததால் அழுது பெயர் வாங்கிவிட்டான்.
நான் அதை முந்த வேண்டும்.
எனவே நீ உடனே சாவு என்றான் அவனது அம்மாவிடம்.

0 comments:

Post a Comment