பண்ணையார்

பக்தாள் தன்னை பண்ணையார் என அழைப்பதை மிகவும் விரும்புவான்.
பலரும் அவனை பண்ணையார் என அழைக்கத் தொடங்கினார்கள்.
ஒரு அறிவாளி பக்தாளை அய்யா வணக்கம் என்றான்.
பண்ணையார் என ஏன் அழைக்கவில்லை என கடிந்து கொண்டான் பக்தாள்.
அய்யா உங்களை எல்லோரும் மனதிற்குள் திட்டுகிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லை என்றான் அறிவாளி.
எப்படி எனக் கேட்டான் பக்தாள்.
பண்ணையில் யார் இருப்பார்கள்?
எருமைமாடுகள் தானே இருக்கும் என்றான் அறிவாளி.
பண்ணையாரும் எருமைமாடும் ஒன்றுதான்.

0 comments:

Post a Comment