யாருகிட்ட? எங்ககிட்டயேவா..!!

டீச்சர் : "ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?"
மாணவன்: "கரண்ட்டு இல்ல டீச்சர்."
டீச்சர் : "வெளக்கு, மெழுகுவர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?"
மாணவன்: "ஆமா டீச்சர். முயற்சி பண்ணினேன். ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை டீச்சர்."
டீச்சர் : "ஏன்?"
மாணவன்: "அது பூஜை ரூமுல இருந்தது."
டீச்சர் : "உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?"
மாணவன்: "இல்ல டீச்சர். நான்தான் குளிக்கலைல்ல. அப்புறம் எப்பிடிப் போறது?"
டீச்சர் : "குளிக்கலையா....ஏன்?"
மாணவன்: "மேல் தொட்டில தண்ணியில்ல."
டீச்சர் : "மோட்டார் போட்டு தண்ணீர் ஏத்த வேண்டியது தானடா? சோம்பேறி...!! எரும"
மாணவன்: "டீச்சர்! லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர். அதான் முதல் பதில்லையே சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு."

0 comments:

Post a Comment