ஷாக்கு

விரைவுப்பேரூந்து சென்னை நோக்கி பறந்தது.. ஜன்னலோர சீட்டில் இதமான காற்றில் தூங்கிக்கொண்டிருந்தான் கோபாலு..
.
செங்கல்பட்டு தாண்டி கூடுவாஞ்சேரி வந்ததும் தனது ட்ராவல் பேக்கை தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டு.. வண்டலூர் வந்துவிட்டதா என ரோட்டை ப்ராக்கு பார்த்துக்கொண்டே பேரூந்து முன்பகுதிக்கு நடக்கலானான்...
.
முன்னே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை தாண்டி செல்கையில் பேரூந்து ஓட்டுனர் பிரேக் அடிச்சாரு அதில் சற்று நிலை தடுமாறி அப்பெண்னின் காலை மிதித்துவிட்டான் கோபாலு...
.
அவள் உடனே திரும்பி பார்த்துவிட்டு... டேய்..என்று சத்தமாய் சொல்லி அவன் முதுகில் ஒரு அடி அடித்தாள்..
.
இதற்குள் பக்கத்தில் அரை தூக்கத்தில் இருந்த தர்மவான்கள் கண்விழித்துவிட்டார்கள்.. ஏதோ தப்பு நடந்துவிட்டதாய் யூகித்து ஆளாளுக்கு அவன் முதுகில் ரெண்டு தப்பு தப்பினார்கள்..
.
"நிறுத்துங்க " என்று அலறினாள். அந்த பெண்.. " ஏன் இப்ப அவன அடிக்கிறீங்க " என்றாள் பதட்டமாக.
.
"என்னம்மா .... உன்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான்ல... அதான் ... ரெண்டு தட்னோம்பா.."
,
"நான் உங்ககிட்ட அப்டி சொன்னேனா !!?"
அவன் என் கிளாசுமேட்.. கோபாலு. ரோம்ப நாள் கழிச்சு திடீர்னு பார்த்த ஒரு பரவசத்தில.. அப்படி தட்டி டேய்னு கூப்பிட்டேன் "... அதுக்குள்ள நீங்க பாட்டுக்கு இந்த அடி அடிக்கிறீங்க " னு கோபமானாள்..
.
இதைக்கேட்டதும் கோபாலு நிமிர்ந்து பார்த்தான்.. ஆம்.. அவள் அவனுடைய பள்ளி தோழி தேவியே தான் அவள்.
.
அவன் மைன்ட் வாய்ஸ் சொல்லிச்சு...
" ஏன்டி..ஷாக் கொடுக்கப்போறேன் ஷாக் கொடுக்கப்போறேன்னு அடிக்கடி சொல்லிட்ருப்பியே... இதானாடி உன் ஷாக்கு..."!!!???

0 comments:

Post a Comment