வாடகை

முல்லா நசுருதீன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு போன் செய்தார்.
"அய்யா, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு ஏழை பெண்ணுக்காக நான் பேசுகிறேன். அவள் விதவை கூட. மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு கூலி வேலை செய்து அனுதினம் கஷ்டப்படுகிறாள் . வாடகை மூன்று மாதத்துக்கு 3000 ரூபாய் பாக்கி வேறு இருக்கிறது. அதைக் கொடுக்கவில்லை என்றால் அவள் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப் படுவாள். அவளுக்கு வாடகை தரவாவது பண உதவி ஏற்பாடு செய்ய உதவுங்கள்.....தயவு செய்து "என்றார்.
"கண்டிப்பாக அய்யா" என்ற மறுமுனை "சரி, நீங்கள் அந்தப் பெண்ணுக்கு என்ன வேண்டும்?" என்றது.
"நான் தான் அவள் வீட்டின் ஹவுஸ் ஓனர்" என்றார் முல்லா.

0 comments:

Post a Comment