வங்கி மேலாளர்

ஒரு வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பணியாளர்கள் அனைவரையும் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இன்னொரு அறையில் வங்கியின் மேலாளரை அடைத்து வைத்தனர். அனைவரையும் கயிறால் கட்டிவைத்து, வாயில் துணியை அடைத்தனர். ஆனால், அதையும் தாண்டி அந்த வங்கியின் மேலாளர் சத்தம்போட முயற்சித்துக்கொண்டே இருந்தார்.
“சரி, என்ன தான் செய்கிறான் பார்ப்போம்” என்று எண்ணிய கொள்ளையன் ஒருவன் அவர் வாயில் இருந்த துணியை எடுத்தான்
“டேய், தயவுசெய்து கணக்கு புக்கையும் எடுத்துட்டு போங்க டா, எவ்ளோ முயற்சி பண்ணியும் ஒரு 50,000 ரூபா கணக்குல இடிக்குது” என்றார் மேலாளர்

0 comments:

Post a Comment