அந்த பெண்....

ஒரு மேடைப் பேச்சாளர் ஒருமுறை இவ்வாறு கூறினார்:
“என் வாழ்க்கையின் சிறந்த நாட்களை நான் ஒரு பெண்ணின் மடியில் செலவிட்டேன், அந்த பெண் என் மனைவி அல்ல” என்றார்
நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது அவர் , “அவர் என் தாயார்....” என்றார்.
இதைக் கேட்டதும் அனைவரும் கரகோஷங்களை எழுப்பி வயிறு குலுங்க சிரித்தனர்.
இதையே தன் வீட்டில் கூற வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு ஒரு கணவர் தன் வீட்டிற்கு சென்றார்.
இரவு உணவு முடிந்ததும், சமையலறையில் இருந்த தன் மனைவியை பார்த்து அவர்
“என் வாழ்க்கையின் சிறந்த நாட்களை நான் ஒரு பெண்ணின் மடியில் செலவிட்டேன், அந்த பெண் என் மனைவி அல்ல” என்றார்
ஒரு கனம் நின்றவாறே, அந்த பேச்சாளர் கூறிய அடுத்த வரி என்ன என்பதை நினைவுகூற முயற்சி செய்தார்
அவருக்கு நினைவு திரும்பியபோது அவர் மருத்துவமனையில் இருந்தார்.
நீதி: உங்களால் செய்யமுடியாதவற்றை காப்பி அடிக்காதீர்கள்...

0 comments:

Post a Comment